Skip to main content

உயிர் வருக்கம் / Uyir Varukkam

 

அறம் செய விரும்பு
நீ தருமத்தை (கடமையை)ச செய்ய ஆவல் கொள்.
Aram seya virumbu
Intend to do right deeds
ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்
Aaruvathu sinam.
Learn to control your anger
இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
Iyalvathu Karavel.
Help others as much as you can
ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
Eevathu Vilakkel.
Do not stop others from doing charitable deeds
உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
Udaiyathu Vilambel.
Dont brag about your riches or talents
ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
Ookamathu Kaividel.
Never lose hope or motivation
எண் எழுத்து இகழேல்
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
Enn eluthu igazhel.
Do not despise numbers and letters (both are important to learn)
ஏற்பது இகழ்ச்சி
பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.

Yerpathu igalchi.
Begging is disgraceful
ஐயமிட்டு உண்
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
Iyam ittu Un.
Share with the needy before you eat
ஒப்புர வொழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
Oppuravu Ozhugu.
Try to live and adapt to your changing world
ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு
Othuvathu Ozhiyel.
Never stop learning
ஒளவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
Avviyam Pesael.H
Do not talk bad about others due to jealousy
அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
Ahgam Surukael.
Never cheat on weight when selling food grains



Comments

Popular posts from this blog

ஆத்திசூடி / Aathichudi

Aathichudi ஆத்திச்சூடி ஔவையாரால்  எழுதப்பட்டது.  இதில் 109 வரிகள் அகரவரிசையில் மற்றும் ஒற்றை வரி மேற்கோள்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் அனைவருக்கும் நல்ல பழக்கம் மற்றும் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது. ஆத்திச்சூடி எப்போதும் தமிழ் கற்றல் குழந்தைகளுக்கு முதல் தமிழ் பாடமாக வைக்கப்படுகிறது.   எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாம் வாழ்க்கையில் , செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்நூல் எளிய மற்றும் சிறு வாக்கியத்தில் கூறியுள்ளது.. ஔவையார்  பற்றி ஔவையார் என்னும் பெயர் பூண்ட பெண் கவிஞர்கள் பலர் இருந்தனர்.   ஔவையார் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கம்பர் மற்றும் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்து வந்தார். ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது.  இவர் பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதியுள்ளார்.  அவை இன்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளின் புத்தகத்தில் இடப்பெற்று இருக்கிறது. ஆத்திசூடி அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது.  தமிழ் மொழி தெரியாத மக்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. About Aathichudi